சனி, 22 ஆகஸ்ட், 2009

இலங்கைக்கு பன்னாட்டு செலாவணி நிதி

இலங்கையில் போர் முடிந்துள்ளது, இலங்கை அரசு மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணியினை அரம்பித்துள்ளது, வரவேற்கக்கிறோம். இப்பணியை அவசரவுணர்வோடு செய்ய வேண்டிய சூழலில் தமிழர் வாழ்நிலை இருக்கிறது. போதிய உணவு, மருத்துவ, இருப்பிட, கழிப்பிட வசதியில்லாமல், இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவதை நாகரிகச் சமுதாயம் அணுமதி்க்க முடியாது.
இலங்கையின் சீரமைப்பு மற்றும் மக்கள் மறுவாழ்வு பணிக்காக, பன்னாட்டு செலாவணி நிதியத்தின் 11200 கோடி ரூபாய் கடனுதிவிக்கு இலங்கை அணுகியது. அதை அமெரிக்கா, பிரி்ட்டன், மற்றும் பிரான்ஸ் எதிரித்தது.ஆனால்,சீனா உள்ள்ளிட்ட சொசலிச நாடுகள்,இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆதரவால் கடனுக்கு அனுமதி கிடைத்தது. இலங்கை அரசு தமிழர்களை இனரீதியாக ஒடுக்குகிறது, ஆகவே பன்னாட்டு செலாவணி நிதியம் இலங்கை அரசுக்கு கடன் தருவதை எதிர்க்கிறோம் என்கிறது அமெரிக்கா, அவர்கள் சொல்கிற சாக்கு சரியா ?. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய்களின் கடந்த கால செயல்களைச் சற்று கவனித்தால் நமக்கு பதில் கிடைக்கும்.இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அமைதி நிலவுவதை அமெரிக்க வல்லரசு விரும்பவில்லை.அமெரிக்கா உலகத்தின் ஆயுத வியாபாரி. போர் நடந்தால் தானே தன்னுடைய ஆயுதங்களை பிற நாடுகளுக்கு விற்று காசு கொழிக்க முடியும். அமெரிக்காவின் அடாவடிதனத்தை நாம் ஈராக்கில் பார்த்தோம்.பசுத்தோல் போர்த்தி வந்தாலும் அமெரிக்கா ஒரு கடித்துக்கொதரும் புலி என்பது தெளிவாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக