
பட்டியல் ஆடுகளைப் போல் மின்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை, கன்னிவெடிகளை அகற்றுதல் என்கிற சாக்குக் காட்டாமல் இலங்கை அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
15 வது மக்களவைக்கு தேர்தல் முடிந்து முற்போக்கு சனநாயக முன்னணி ஆட்சியில் அமர்ந்துள்ளது.பா.ச.க. வின் தோல்வி நாட்டின் அமைதிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி. 3 வது அணியின் தோல்வி்க்கான காரணங்களை இன்னும் ஆராய வேணடியிருக்கிறது. 3 வது அணியை மக்கள் ஏற்க்கவில்லை.3 வது அணியில் இருந்த கட்சிகளுள் ஒற்றுமையில்லை. பா.ச.க. ஆட்சிக்கு வந்துவிடுமோ? என்ற அச்சம் சிறுபான்மையினரை காங்கிரசுக்கு ஆதரவாகத் தள்ளியிருக்கிறது.நமது நாட்டின் குடியரசு தலைவர் ஒரு பெண். மக்களவைத் தலைவர் ஒரு பெண். மிகவும் மகிழ்ச்சி.,,பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள்நடத்த வந்தோம்,, என்ற மகாகவி பாரதியின் கனவுகள் நனவாகுவதில் உள்ளம் பூரிப்பு கொள்கிறது.ம்ககளவைக்கு 58 பெண் உறுப்பினர்கள் வந்துள்ளார்கள். இது மக்களவை உறுப்பினர்களில் 10 சதம் தான். இது போதாது. 50 க்கு 50 வேண்டும். மீதமுள்ள 40 சதத்தை பெண்கள் பெற அனைவரும் பணியாற்ற வேண்டும். 33 சதவீத பெண்கள் இடஓதுக்கீடு மசோதா விரைவில் வெற்றி பெற நாம் உழைப்போம்.சில விபரங்களைப் பார்க்கிறப்பொழுது மிகவும் வருத்தமாகவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள், 150 பேர்கள் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள்.இதில் 42 பேர்கள் பா.ச.க. 41 பேர்கள் காங்கிரசு. 300 உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு சொந்தக்காரர்கள்.இதில் 138 காங்கிரசு. 58 பா.ச.க. அடங்குவர். குரங்குகள் கையில் பூமாலைகள் கொடுத்த கதையாக ஆகிவிடுமோ ? மிகவும் அச்சமாகவுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்
இலங்கை அரசின் சிங்கள பேரினவாதக் கொள்கை கைவிடப்பட வேண்டும். அரசு என்பது மக்களுக்கு பொதுவாக இருத்தல் வேண்டும்.எல்லாருடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டு்ம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு எல்லோர்க்கும் கிடைக்க உத்தரவாதம் வேண்டும். கடந்த கால் நூற்றாண்டு காலமாக, இலங்கையின் பேரினவாதக் கொள்கை தான், இலங்கை தமிழர்களைப் போராட தள்ளியது. தனிஈழம் என்ற கோரிக்கையும் எழுந்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும் தோன்றியது.தமிழ்நாட்டடில் தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கை எழுந்து கைவிடப்பட்டப் சூழலில் இலங்கையில் தமிழர்களிக்கு தமிழ் ஈழம் கோரப்பட்டது. விடுதலைப் புலிகள் அரசியல் இயக்கத்தைக் காட்டடிலும் இராணுவ இயக்கத்தை நம்பினார்கள், சகல தமிழ் சகோதர அமைப்புகளை அழித்தார்கள். கம்யூனிஸ்ட் இயக்கங்களை குறிவைத்துத் தாக்கினார்கள்.தனிஈழம் என்பது இலங்கை இராணுவத்திற்க்கும் விடுதலைப் புலிகளிக்கும் இடையே போராக மாறியது.இப்பொழுது போர் முடிந்துள்ளது, விடுதலைப் புலிகள் பின்னடவை அடைந்துள்ளார்கள்.தமிழர்களுக்குள் ஏழை, பண்காரன், தொழிலாளி முதலாளி, இந்து முஸ்லீம்,இந்துவில் பல்வேறு சாதிகள், தலித் தீண்டாமை என்று இவ்வளவு முரண்பாடுகள் இருக்கையில், அனைத்து இலங்கைத் தமிழ் மக்களை தமிழ் என்கிற ஓர் ஒற்றை குறியீட்டில் அடைக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. முதலில் இலங்கைத் தமிழர்கள் குறைந்தபட்ச கருத்தொற்றுமைக்கு வர வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வு பெற முயற்சிக்க வேண்டும்.தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சுயாட்சிவுரிமையும், சிங்களவர்க்கு சமமான அதிகாரப்பகிர்வும் பெறுதல் வேண்டி அனைவரும் செயல்படுவோம்.