வியாழன், 27 ஆகஸ்ட், 2009

பாராளுமன்றத்தில் பணநாயகம். சனநாயகம் தழைக்குமா?

15 வது மக்களவைக்கு தேர்தல் முடிந்து முற்போக்கு சனநாயக முன்னணி ஆட்சியில் அமர்ந்துள்ளது.பா.ச.க. வின் தோல்வி நாட்டின் அமைதிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி. 3 வது அணியின் தோல்வி்க்கான காரணங்களை இன்னும் ஆராய வேணடியிருக்கிறது. 3 வது அணியை மக்கள் ஏற்க்கவில்லை.3 வது அணியில் இருந்த கட்சிகளுள் ஒற்றுமையில்லை. பா.ச.க. ஆட்சிக்கு வந்துவிடுமோ? என்ற அச்சம் சிறுபான்மையினரை காங்கிரசுக்கு ஆதரவாகத் தள்ளியிருக்கிறது.நமது நாட்டின் குடியரசு தலைவர் ஒரு பெண். மக்களவைத் தலைவர் ஒரு பெண். மிகவும் மகிழ்ச்சி.,,பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள்நடத்த வந்தோம்,, என்ற மகாகவி பாரதியின் கனவுகள் நனவாகுவதில் உள்ளம் பூரிப்பு கொள்கிறது.ம்ககளவைக்கு 58 பெண் உறுப்பினர்கள் வந்துள்ளார்கள். இது மக்களவை உறுப்பினர்களில் 10 சதம் தான். இது போதாது. 50 க்கு 50 வேண்டும். மீதமுள்ள 40 சதத்தை பெண்கள் பெற அனைவரும் பணியாற்ற வேண்டும். 33 சதவீத பெண்கள் இடஓதுக்கீடு மசோதா விரைவில் வெற்றி பெற நாம் உழைப்போம்.சில விபரங்களைப் பார்க்கிறப்பொழுது மிகவும் வருத்தமாகவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள், 150 பேர்கள் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள்.இதில் 42 பேர்கள் பா.ச.க. 41 பேர்கள் காங்கிரசு. 300 உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு சொந்தக்காரர்கள்.இதில் 138 காங்கிரசு. 58 பா.ச.க. அடங்குவர். குரங்குகள் கையில் பூமாலைகள் கொடுத்த கதையாக ஆகிவிடுமோ ? மிகவும் அச்சமாகவுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக